மாவீரர் நாளை அனுட்டிப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
“மாவீரர் நினைவுதின கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்படவில்லை என்பதையும், அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என உணரும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதையும் அரசு வலியுறுத்துகிறது“ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.