யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளியவாய்க்கால் நினைவுதூபி நேற்றைய தினம் இரவு அடியோடு தனகர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் அரசியல்வாதிகள் பொதுமக்கள் உள்ளடங்களாக பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் ஒரு பதற்றமான நிலையில் காணப்படுகிறது.
தற்போதைய சூழலில் ஈழத்தமிழருக்கு ஆதரவு வழங்கும் முகமாக தமிழகத்தின் அரசியல் தலமைகளும் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலமை திருமாவளவன் மற்றும் அ.தி.மு.காவை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.