நாட்டில் இன்று 502 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,358 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,628 ஆக அதிகரித்துள்ளது.
மூன்று வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 7,430 பேர் தற்போது நாடு முழுவதும் 66 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று குணமடைந்த மேலும் 562 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 36,717 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று சந்தேத்தில் 586 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.