இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.
ஆலையடி வேம்பு பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவரும், அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் தர்கா நகரத்தை சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.