இன்று (4) மேலும் 5 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,074 ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் இருவர், அமெரிக்கா, மடகஸ்கார், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து திரும்பிய தலா ஒவ்வொருவர் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று 22 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வைத்தியசாகைளில் 178 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.