
யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
எதிர்வரும் காலத்தில் செய்யப்பட்ட உள்ள அபிவிருத்தி தொடர்பில் இக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், வடமாகாண சபையின் பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலுல் வடமாகாண திணைக்களத்தின் செயலாளர், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பொலிஸ், இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, கடந்தமுறை ரணில் யாழ் வந்தபோதும், இதேவிதமான அபிவிருத்தி கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது, யாழில் அவசியமான அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டது. எனினும், அதில் ஒன்று கூட இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று மீண்டும் அபிவிருத்திகுழு கலந்துரையாடல் இடம்பெற்றது.
