
பொலன்னறுவை தொல்பொருள் நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் ஜூலை மாதம் 3ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பி.கே.எஸ்.ரவீந்திர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,
“900 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படும் இந்த நிலையத்தில் இலங்கையின் ஆதி மக்கள் முன்னெடுத்த தொழில்நுட்ப தகவல்கள் ஆகியவற்றை அறிந்துக்கொள்ள முடியும்.
உலகில் ஏனைய நாடுகளின் தொழில்நுட்ப பாவனையிலும் பார்க்க இலங்கையில் இருந்த தொழில்நுட்பம் மிகவும் உயர்வானது என்பதை இதன் மூலம் அறிந்துக்கொள்ள முடியும். பொலன்னறுவை மன்னர் காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை ஆய்வு செய்வதற்கும் அதனை பார்வையிடுவதற்கும் இங்கு வசதி உண்டு.
இலங்கை வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் இராவணன் பயன்படுத்திய வாகன தகவலை அடிப்படையாகக் கொண்டே தற்பொழுது விண்ணில் பறக்கும் விமானம் தயாரிக்கப்பட்டதான தகவல் உண்டு. இது தொடர்பான விடயங்கள் இந்த தொல்பொருள் நிலையத்தில் உள்ளதா என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியெழுப்பினார்.
இதனையும் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
