
வடமாகாண விவசாய அமைச்சின் கணக்காய்வுக்குழு கூட்டத்தில் நேற்று (27) நடந்த பெரும் களேபரத்தை தொடர்ந்து, வவுனியா பிரதி விவசாய பணிப்பாளர் தாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆளுனர் செயலக அதிகாரியொருவரின் தலையீட்டில், முல்லைத்தீவு பிரதி விவசாய பணிப்பாளர் பொலிஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாக நேற்று விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இந்த நிலையில் வடக்கு ஆளுனர் இந்த விடயத்தில் தலையிட்டுள்ளார். நேற்றைய சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தி, 24 மணித்தியாலயத்தில் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென வடக்கு விவசாய அமைச்சின் செயலாளரை பணித்துள்ளார்.
Loading...
