
குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சாபி சிஹாப்தீனை உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.
தான் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோமானது என்று உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வைத்தியர் சாபியின் சட்டத்தரணிகளால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சொத்து விபரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சாபி சிஹாப்தீன் கைது செய்யப்பட்டார். எனினும், சட்டவிரோத கருத்தடையில் அவர் ஈடுபட்டதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Loading...
