ஒவ்வொரு ஆண்டும் Future Mind அமைப்பினரால் துளிர் எனும் மர நடுகை செயற்றிட்டம் நடைபெற்று வருகின்றது. அதே போல் இவ் வருடமும் பல்லாயிரக் கணக்கான மர நடுகை செயற்றிட்டத்தினை தொடர்ச்சியாக செய்வதற்காக எண்ணியுள்ளோம்.
இதன் ஆரம்ப நாளான இன்று மர நடுகை செங்கலடி , கொம்மாதுறை மற்றும் கொண்டயண்கேணி ஆகிய இடங்களில் ஆரம்பிக்கப்பட்டதோடு இம் மாத இறுதிக்குள் வாழைச்சேனை, கிரான், புணானை, வாகரை, சந்திவெளி வந்தாறுமூலை ஆகிய பிரதேசங்களிலும் நடைபெறவுள்ளதோடு ஜனவரி மாதமளவில் இச் செயற்றிட்டம் மட்டக்களப்பு திருகோணமலை கல்முனை ஆகிய பிரதேசங்களிலும் செயற்படுத்தப்படவுள்ளது.
இம் மரக் கன்றுகளை தொடர்ச்சியாக பராமரித்து வளர்ப்பவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.
Loading...