நாட்டில் இன்று 190 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையை 44,964 ஆக உயர்ந்துள்ளது.
3 வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 6,934 பேர் தற்போது 64 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று 565 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37,817 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்று சந்தேகத்தில் 583 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.