கர்நாடகா துணை சபாநாயகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கர்நாடகா சட்ட மேலவை துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
இன்று காலை மாநிலத்தின் சிக்கமகளூரு மாவட்டத்தில் ரயில் பாதையின் அருகே இறந்து கிடந்தார் என்று பொலிசார் தெரிவித்தனர்.
இது தற்கொலை வழக்கு என்றும் அவரது உடலுக்கு அருகில் ஒரு குறிப்பும் கிடைத்ததாகவும் பொலிசார் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
அதிகாலை 2 மணியளவில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜனதா தளத்தின் (மதச்சார்பற்ற) உறுப்பினர் தர்மேகவுடா.