கைவிலங்குடன் தப்பியோடியவர் சரண்

Date:

வேட்டையாடும்போது கைது செய்யப்பட்ட போது கைவிலங்குடன் ஓடிய நபரொருவர் பின்னர் கைவிலங்குடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்து சரணடைந்துள்ளதாக கம்புருபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

கம்புருப்பிட்டி பொலிஸார் 14 ஏக்கர் பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மற்றும் நபர்களை செப்டம்பர் 26 ஆம் திகதி இரவு சோதனையிட்டனர்.

ஒரு மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது, அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவரிடம் இருந்து ஒரு கூர்மையான கத்தி மற்றும் விலங்குகளை கொல்ல பயன்படுத்தப்படும் மேம்பட்ட வெடிக்கும் சாதனம் (ஹக்கபட்டாஸ்) போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன்படி சந்தேகத்தின் பேரில் இவரை கைது செய்ய ஆயத்தமாக இருந்த அதிகாரிகள் ஒரு புறம் கைவிலங்கை வைத்து மறுபுறம் கைவிலங்கு போட முற்பட்ட போது அதிகாரிகளை தள்ளிவிட்டு கைவிலங்குடன் ஓடியுள்ளார்.

குறித்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி பொலிஸாரிடம் வந்து கைவிலங்குடன் சரணடைந்துள்ளார். அநுராதபுரம் சாலிய வெவ நகரை வசிப்பிடமாகக் கொண்ட 33 வயதுடைய இந்த நபர் கம்புருபிட்டியவில் தற்காலிகமாக தங்கியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நபர் வேட்டையாடச் சென்ற வேளையில் பிடிபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கள்ளக்காதலா?… போதைப்பொருள் கடத்தலா?: சுட்டி கொலைக்கு காரணமென்ன?

நாத்தாண்டியா விக்கிரமசிங்க சாலையில் மூன்று பிள்ளைகளின் தாயான ஒருவர் கந்த 22ஆம்...

துப்பாக்கி விவகாரத்தில் தேடப்படும் நபர்

செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் T-56 துப்பாக்கியை வைத்திருந்தது தொடர்பாக தலைமறைவாக உள்ள...

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க பிரான்ஸ் முடிவு

செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையில் பிரான்ஸ் பாலஸ்தீன அரசை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்